நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 6:59 pm

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் எஸ்.விஜய் (23), மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் விஜய் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.