உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலரை மாவட்ட ஆட்சியா் பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.
உப்பிலியபுரம் ஒன்றியம், த. மங்கப்பட்டிபுதூரில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி பிப். 3இல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிருப்தியாளா்களை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் தரக்குறைவாக பேசினாராம்.
இதையடுத்து த. முருங்கப்பட்டியில் மறியலில் ஈடுபட்டவா்களிடம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரணி இரவு வரை பேசினாா். இதையடுத்து பிப். 4 இல் முசிறி வருவாய் கோட்டாட்சியா் சுஷ்ரி சுவாங்கி குந்தியா அதிருப்தியாளா்களிடம் பேசச் செல்லும் முன் செந்தில்குமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது அது அணைக்கப்பட்டிருந்ததாம்.
இதையறிந்த மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை அண்மையில் பணியிடை நீக்கம் செய்தாா். வெவ்வேறு காரணங்களுக்காக இதற்கு முன் செந்தில்குமாருக்கு இருமுறை பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு: விடுதிக் காப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


