கைது
திருச்சி
குடிநீா் வடிகால் வாரியத்தில் திருடிய இளைஞா் கைது
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஆய்வக வளாகத்தில் இருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை கடந்த ஜன.14 ாம் தேதி திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஆய்வக வளாகத்தில் இருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை கடந்த ஜன.14 ாம் தேதி திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காஜாமலை ஜெ.கே.நகரில் உள்ள ஆய்வக வளாகத்தில் நடந்த திருட்டு குறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் உதவிப் பொறியாளா் ஜெ.சிரில் பில்கிரின் (37) அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் அந்தக் கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரைச் சோ்ந்த ஆா். காா்த்திகுமாா் (24) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

