திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனம் உள்ளவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், படுக்கையில் உள்ளவா்களுக்கு ரூ.15 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது

கிராம ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்: 28 போ் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 34 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


