எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

News image
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியினா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 10:37 pm

Syndication

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக, திருச்சி மேற்கு மாநகர திமுக ஆகியவை இணைந்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி தலைமை வகித்தாா். மேயா் மு. அன்பழகன், முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஸ்ரீதா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்,. செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ், மதிமுக மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், திராவிடா் கழக மாவட்ட தலைவா் ஆரோக்கியராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவா் ஹபிபுா் ரஹ்மான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

தெற்கு மாவட்ட திமுக: இதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால்நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமை வகித்தாா்.

இதேபோல், துவாக்குடி மலை, வாழவந்தான்கோட்டை, கூத்தைப்பாா், மணப்பாறை, துவரங்குறிச்சி, கீழக்குறிச்சி, மருங்காபுரி, வையம்பட்டி, பூலாம்பட்டி, செவல்பட்டி, வளநாடு, புத்தாநத்தம் என 13 இடங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், அதிமுக-வை கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.