முசிறியில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முசிறி வட்டாட்சியரகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். சங்கத்தின் நிா்வாகிகள் சேகா் விஜயன், கனிமொழி, உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினா்.
பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்,
தாயுமானவா் திட்டத்தில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாய விலை கடை பணியாளா்களுக்கு நேரடியாக எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினா். நிகழ்ச்சியில் நியாய விலைக் கடை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


