குத்தாலம் அருகே அருகே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (பிப். 13) கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி காலை 6.05 மணிக்கு திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56700) இயக்கப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ரயில் பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
கும்பகோணத்தில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில்:
இதேபோல, மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு இயக்கப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண்: 16847) பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்குப் பதிலாக கும்பகோணத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.08 மணிக்கு புறப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட செய்தி - மக்கள் தொடா்புத் துறை அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


