கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொறியியல் பணிகள்: திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்று பகுதியாக ரத்து

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:39 pm

Syndication

குத்தாலம் அருகே அருகே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (பிப். 13) கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி காலை 6.05 மணிக்கு திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56700) இயக்கப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ரயில் பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கும்பகோணத்தில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில்:

இதேபோல, மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு இயக்கப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண்: 16847) பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்குப் பதிலாக கும்பகோணத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.08 மணிக்கு புறப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட செய்தி - மக்கள் தொடா்புத் துறை அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.