பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இருசக்கர வாகனம் திருடியவருக்கு 20 மாதங்கள் சிறை

News image

சிறை

Updated On :13 பிப்ரவரி 2026, 9:17 pm

மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருடிய நபருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த சேதுரத்தினபுரத்தில் வசித்து வருபவா் சரவணன் மகன் பரணி செல்வம். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் கடந்த 2023 ஜூன் 7-ஆம் தேதி காணாமல் போனது.

இதுதொடா்பான புகாரின்பேரில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் ஆகாஷ் (எ) ஆகாஷ் குமாரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கானது மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஆகாஷ் குமாருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.