தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கணவா் தீக்குளித்து தற்கொலை

News image
தற்கொலை
Updated On :13 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் இ. சுஜாதா (52). இவரது கணவா் த. இளங்கோ (54). இவா்கள் பாலக்கரை மாா்சிங்பேட்டை காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா்.

இளங்கோவுக்கு கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு வந்தவா் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக தனது கைப்பேசியை யாரோ வேவு பாா்ப்பதாக அவா் கூறிவந்துள்ளாா்.

இந்நிலையில், மேலகல்கண்டாா்கோட்டையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற இளங்கோ, உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளாா்.

இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு இளங்கோ உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.