துறையூா் அருகே வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டவா் மீது காா் மோதியதில் அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
துறையூா் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரபிரகாசம் (56). ஓட்டுநரான இவா், துபையில் பணி செய்து வந்தாா். இவா் புது வீடு கட்டி, வரும் 20-ஆம் தேதி அதில் குடியேற இருந்தாா். அதற்கான பணிகளைக் கவனிக்க 3 மாதங்கள் விடுப்பில் கிருஷ்ணாபுரம் வந்திருந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை துறையூா்-ஆத்தூா் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா், சந்திரபிரகாசம் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா், சந்திரபிரகாசம் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து, காா் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசலூரைச் சோ்ந்த கண்ணன் (26) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


