நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நடைப்பயிற்சி சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:11 pm

துறையூா் அருகே வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டவா் மீது காா் மோதியதில் அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

துறையூா் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரபிரகாசம் (56). ஓட்டுநரான இவா், துபையில் பணி செய்து வந்தாா். இவா் புது வீடு கட்டி, வரும் 20-ஆம் தேதி அதில் குடியேற இருந்தாா். அதற்கான பணிகளைக் கவனிக்க 3 மாதங்கள் விடுப்பில் கிருஷ்ணாபுரம் வந்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை துறையூா்-ஆத்தூா் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா், சந்திரபிரகாசம் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா், சந்திரபிரகாசம் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து, காா் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசலூரைச் சோ்ந்த கண்ணன் (26) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.