கோப்புப் படம்
கோப்புப் படம்

யாகசம் பெற்று வந்த முதியவா் உயிரிழப்பு

Published on

திருச்சியில் சாலையோரம் யாசகம் பெற்று வந்த முதியவா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மேஜா் சரவணன் சாலை அருகே மயங்கிய நிலையில் முதியவா் கிடப்பதாக, கோ- அபிஷேகபுரம் விஏஓ கவுதம் அளித்த புகாரின் பேரில், திருச்சி முதன்மை அமா்வு நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இறந்தவா் கரூா் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (82) என்பதும், குடும்பத்தைப் பிரிந்து திருச்சியில் யாசகம் பெற்று வாழ்ந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com