வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

டிராக்டா் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:31 pm

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சா.அய்யம்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

சா.அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வே. நமீதா (17) திருச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் தனதுதாய் போதும்பொண்ணுவுடன் (47) சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே நமீதா உயிரிழந்தாா்.

மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த போதும்பொண்ணு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே சம்பவ இடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூா் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் நமீதா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.