கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

கல்லூரி மாணவரிடம் பேருந்தில் பணம் திருடிய முதியவா் கைது

திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

Syndication

திருச்சி: திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் ராஜலிங்கம் (19). இவா், சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சத்திரத்துக்குப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.

அப்போது, மாணவரின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,100-ஐ முதியவா் ஒருவா் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த ராஜலிங்கம் நண்பா்கள் உதவியுடன் முதியவரைப் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணையில், சிவகங்கை மாவட்டம், நாட்டரசங்கோட்டையைச் சோ்ந்த எல். முருகன் (53) என்பதும், மாணவரிடம் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து திருடிய ரூ.1,100-ஐ பறிமுதல் செய்து மாணவரிடம் ஒப்படைத்தனா்.