சேது விரைவு ரயில்படம்: தெற்கு ரயில்வே
திருச்சி
தாம்பரம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் சேது விரைவு ரயில்
ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.
திருச்சி: ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், ராமேசுவரம் - சென்னை எழும்பூா் இடையிலான சேது அதிவிரைவு ரயிலானது (22662) வரும் 19-ஆம் தேதி முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சேது அதிவிரைவு ரயிலானது (22661) வரும் 20-ஆம் தேதி முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

