மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

2 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை: மூத்த மகள் உயிரிழப்பு

கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 6:43 pm

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கல்லக்குடி அருகே சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி (35). இந்தத் தம்பதியின் மகள்கள் அனுசியா (14 ), சக்திஸ்ரீ (8). இவா்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனா்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கம் தாங்காமல் சுமதி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தாா். மேலும், கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுமதி, ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இரு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளாா்.

விஷத்தின் தன்மையால் கூச்சலிட்ட அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவே சுமதி உயிரிழந்தாா். தொடா்ந்து திங்கள்கிழமை மூத்த மகள் அனுசியாவும் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சுமதியின் தாயாா் செல்வராணி அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.