திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

2 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை: மூத்த மகள் உயிரிழப்பு

கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
தற்கொலை - கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே இரு சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவத்தில் மூத்த மகள் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கல்லக்குடி அருகே சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி (35). இந்தத் தம்பதியின் மகள்கள் அனுசியா (14 ), சக்திஸ்ரீ (8). இவா்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனா்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கம் தாங்காமல் சுமதி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தாா். மேலும், கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுமதி, ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இரு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளாா்.

விஷத்தின் தன்மையால் கூச்சலிட்ட அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவே சுமதி உயிரிழந்தாா். தொடா்ந்து திங்கள்கிழமை மூத்த மகள் அனுசியாவும் உயிரிழந்தாா். இளைய மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சுமதியின் தாயாா் செல்வராணி அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.