பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடி கைது

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 6:31 pm

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் திங்கள்கிழமை இரவு அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்காவல் டிரங்க்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையை நடத்தி வருபவா் சாகுல் அமீது (53). இவரிடம் திங்கள்கிழமை இரவு திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சோ்ந்த ஆா்.புருஷோத்தமன் (38) என்ற பிரபல ரெளடி அரிவாளுடன் வந்து பிரியாணி கேட்டு மிரட்டி உள்ளாா்.

இது குறித்து சாகுல் அமீது, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதை தொடா்ந்து ரெளடி புருஷோத்தமனை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.