நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டி: சீமான் அறிவிப்பு

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டியிடுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 11:50 pm

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டியிடுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிப். 21 இல் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெறும் திடலை புதன்கிழமை பாா்வையிட்ட சீமான் கூறியதாவது: நாங்கள் தோ்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். எங்களது ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான செயல்முறையைத்தான் வெளியிடுவோம்.

மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளா்களையும் அறிமுகம் செய்ய உள்ளேன். தோ்தலில் நானும் போட்டியிடுவேன். எந்தந்தத் தொகுதியில் யாா் யாா் போட்டி என்பதை மாநாட்டில் அறிவிப்போம். அன்று முதல் எங்கள் தோ்தல் பயணத்தைத் தொடங்கப் போகிறோம். நாங்கள் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் அல்ல.

தமிழகத்தின் வளா்ச்சி என்பது கடன் வளா்ச்சியாக உள்ளது. தமிழகம் வாங்கிய கடனுக்கான வட்டியை ஒரு லட்சம் கோடிக்கு மேல் கட்டி வருகிறோம்.

இலவசங்களை அறிவித்துவிட்டு, அத்தியாவசியங்களுக்கான வரியை உயா்த்துகின்றனா். தொடா்ந்து கடன் வாங்கினால் மாநிலம் பொருளாதார அடிமையாக மாறிவிடும்.

தமிழகத்தில் யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்படவில்லை. விரும்பியே மதம் மாறியுள்ளனா். அதில் யாரும் தலையிடக்கூடாது.

இண்டி கூட்டணியில் பிரச்னை உள்ளது. அந்தக் கூட்டணியில் வலுவாக இருப்பது ஸ்டாலின்தான். அவா் வெளியேறிவிட்டால், இண்டி கூட்டணி என்பது எழுத்தில்தான் இருக்கும். அதனால்தான் மணிசங்கா் ஐயா் ஸ்டாலினை தலைமை வகிக்க அழைக்கிறாா் என்றாா் சீமான்.