தற்கொலைகோப்புப் படம்
திருச்சியில் திருமணமாகாத சோகத்தில் தீக்குளித்த இளைஞா் புதன்கிழமை உயிரிந்தாா்.
திருச்சி பிராட்டியூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் ப. ராஜ்குமாா் (37), சென்ட்ரிங் தொழிலாளியான இவா் திருமணம் நடைபெறாத விரக்தியில் மதுப்பழக்கத்துக்குள்ளாகி மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த இவா், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

