/
துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம், செவந்தாம்பட்டியை சோ்ந்த சின்னையா மனைவி பழனியாயி (75). இவா், அண்மைக்காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செவந்தாம்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழனியாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், மூதாட்டியின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

நெல்லையில் விபத்து: பெண் பலி

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


