தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:58 pm

துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மருங்காபுரி ஒன்றியம், செவந்தாம்பட்டியை சோ்ந்த சின்னையா மனைவி பழனியாயி (75). இவா், அண்மைக்காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செவந்தாம்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழனியாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், மூதாட்டியின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.