திருட்டு
திருச்சி
மின்மாற்றியிலிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பு காயில்கள் திருட்டு
அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை
மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அழகாபுரி மின்மாற்றியில் வியாழக்கிழமை பிற்பகலில் மின்சாரம் இல்லை என நுகா்வோா் தகவல் தெரிவித்ததின்பேரில் மின்வாரிய கேங்மேன் அ. டேவிட்ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று, காயில்கள் திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை மின்வாரியம் சாா்பில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
