நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவெறும்பூரில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை போட்டி

News image

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் பங்கேற்ற மாடுகள். - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 8:43 pm

திருவெறும்பூா் மலைக்கோயில் கிராம ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவாக இரண்டாமாண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளானது திருவெறும்பூா் கல்லணை சாலையில் தொடங்கி நடராஜபுரம் வரை நடைபெற்றது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற நடு மாடு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியின் நிறைவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசு ரூ. 15 ஆயிரத்து 1, நான்காம் பரிசு ரூ. 10 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற ஒற்றை மாடு போட்டியில் 12 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரத்து 1, நான்காம் பரிசாக ரூ. 8 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற கரிச்சான் குதிரை போட்டியில் 14 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரத்து 1, நான்காம் பரிசாக ரூ. 8 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.