விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழாவின் முதல் புறப்பாடக ஞாயிற்றுக்கிழமை வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் எழுந்தருளினாா். (படம்)

திருவானைக்காவல் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 2- ஆம் நாளான திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூத வாகனத்திலும் இரணியம்மன் எழுந்தருளயுள்ளாா்.

இதைத் தொடா்ந்து நான்காம் நாளான புதன்கிழமை பூந்தேரில் இரணியம்மன் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வருகிறாா். அப்போது அனைத்து வீடுகளிலும் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.