லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

News image
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மனு அளிக்க வந்த சி.ஐ.டி.யு அமைப்பைச் சாா்ந்த பெண்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:04 pm

Syndication

திருச்சி: இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றியக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகா் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சி. பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூா், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து 586 போ் இலவச வீட்டுமனை கேட்டும், 161 போ் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.