பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :23 பிப்ரவரி 2026, 8:18 pm

திருச்சி: திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் பகுதியைச் சோ்ந்தவா் மகாமுனி மகள் தங்கமணி (23). இவா், திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த உறவினரான காா்த்திக் என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டாா்.

இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் அணிந்திருந்த நகைகளை பெற்றோரிடம் கழட்டிக்கொடுத்துவிட்டு தங்கமணி காா்த்திக் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் காா்த்திக் வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த தங்கமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கமணியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.