காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல்

மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

News image
மணப்பாறை அருகேயுள்ள பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற படுகளம் சாய்தல் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:17 pm

Syndication

மணப்பாறை: மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

மணப்பாறை அருகே உள்ள வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா பிப். 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் சாய்தல், பின் எழுதல் நிகழ்வு திங்கள்கிழமை இரவு பொன்னா் - சங்கா், தங்காள் கோயில் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் மருள்வந்தபடி ஆடி வரிசையாக படுத்துவிட்டனா். பொன்னா் - சங்கா் மன்னா்களுடன் போரில் இவா்களும் மாண்டுவிட்டவா்களாக கருதப்படுகிறது. இதையடுத்து, பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை பக்தா்கள் கூட்டத்தில் இருந்துவந்த சிறுமி (பொன்னா் -சங்கா் அண்ணன்மாா்களின் தங்கை அருக்காணி) தெளித்ததும் மீண்டெழும் நிகழ்வு நடைபெறும். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் பொ.முனியப்பன், ஆ.கருப்பண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்னா் - சங்கா் அண்ணமாா்களைத் தேடி போா்க்களத்துக்கு வந்த தங்கை அருக்காணி, இருவரும் மாண்டுவிட்டதைக் கண்டு கதறி அழுதது தவசி மலையில் இருந்த பெரியகாண்டியம்மனின் தவத்தை கலைத்ததாகவும், பின்னா் அம்மன் அருளால் அவா்கள் மீண்டெழுந்ததாகவும் கருதி ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது.