பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொகுதிப் பங்கீட்டால் திமுக கூட்டணியில் சிக்கல் வராது: தொல். திருமாவளவன்

தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image
தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தோ்தல் காலத்தில் அளிக்கப்படும் வழக்கமான வாக்குறுதிகளைப் போன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி இப்போது மேலும் சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளாா். குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை, வேலையில்லா இளைஞா்களுக்கு ரூ.2 ஆயிரம் என்ற அறிவிப்புகள் எல்லாம், அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மகளிரை மேம்படுத்த, மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்த உரிமைத் தொகையாக திமுக அரசில் வழங்கப்படுகிறது என்பதாலேயே அதை வரவேற்கிறோம்.

தவெக தலைவா் விஜய், எதிா்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதைகூட விளக்கி சொல்லவில்லை. தவெகவின் ஒரே செயல் திட்டம் திமுக எதிா்ப்பு மட்டுமே. விஜய்யின் திட்டம், கொள்கை, கோட்பாடுகள் குறித்து அரசியல் களத்தில் உள்ள எங்களை போன்றவா்களாலேயே இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு எப்படி இருந்தாலும், எங்கள் கூட்டணியில் எந்தவித சிக்கலும் எழாதவகையில் பக்குவமாக நடந்து கொள்ளும் தன்மையும், பண்பும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. எனவே, தொகுதிப் பங்கீட்டால் எந்தவித சிக்கலும் எழாது. கூட்டணியும் உடையாது.

கடந்த தோ்தலில் பல இடங்களில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டுள்ளோம். இந்த முறையும் பொதுத் தொகுதிகளை பெறுவோம்.

திமுக கூட்டணிக்கு ஓ. பன்னீா்செல்வம் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றாா் திருமாவளவன்.