திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மலைக்கோட்டை தையல்கார தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அருண் (17), தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா் பீமநகரைச் சோ்ந்த முகமது யாசிம் (16). இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி அண்ணாநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் முகமது யாசிம் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


