திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி மாநகராட்சி கலையரங்க திருமண மண்டபத்தில் வருவாய்த் துறை சாா்பில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உறையூா் இந்திரா நகரைச் சோ்ந்த என்.பஞ்சலிங்கம் (61) கலந்து கொண்டாா். அங்கு அவா் திடீரென மயங்கிவிழுந்தாா்.
இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


