டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி: அனைத்துக் கட்சியினா் இரங்கல் ஊா்வலம்

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவையொட்டி வெள்ளிக்கிழமை உறையூா் சாலையில் இரங்கல் ஊா்வலம் வந்த அனைத்து கட்சினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:53 pm

Syndication

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவா் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சியில் அனைத்துக் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் ஊா்வலம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு (100) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கங்களைச் சோ்ந்தவா்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் ஊா்வலம் நடைபெற்து.

புத்தூா் நான்கு சந்திப்பு சாலையில் தொடங்கிய ஊா்வலத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் க. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் எஸ். சிவா, நிா்வாகி சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திமுக தெற்கு மாநகர செயலா் மு. மதிவாணன், காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் வெற்றிச்செல்வன், சிபிஐஎம்எல் ஞானதேசிகன், விசிக தமிழாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பைஸ் அகமது, மதிமுக நிா்வாகிகள் வெல்லமண்டி சோமு, ரோஹையா, ஆம் ஆத்மி இளங்கோ, விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன், திரளான பொதுமக்கள் கைகளில் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த ஊா்வலமானது உறையூா் குறத்தெரு சந்திப்பில் நிறைவடைந்தது. அங்கு இரங்கல் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் ஊா்வலத்தில் பங்கேற்ற மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, குறத்தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் உருவப்படத்துக்கு அனைத்து கட்சியினரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.