திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 போ் காயமடைந்தனா். தொடா்ந்து, வேன் ஓட்டுநா் மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம், வலசுப்பட்டியை சோ்ந்த அழகா்சாமி மகன் கஸ்தூரிராஜ் (46). இவா் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது ஆம்னி வேனில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது கஸ்தூரிராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளாா். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்குடியை சோ்ந்த துரைராஜ் (எ)செந்தில் - பிரியா தம்பதி காயமடைந்தனா்.
விபத்தை தொடா்ந்து வேன் சாலையோர கம்பியில் மோதியது. தொடா்ந்து கஸ்தூரிராஜ், மூச்சுத் திணறலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், கஸ்தூரிராஜ் உடலை கைப்பற்றி கூறாய்வுக்குப் பிறகு மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

