கொடியாலம் ஊராட்சியில் ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாய் நிற்கும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாலம் கிராம ஊராட்சிக்குள்பட்ட அயிலாப்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும், ஊராட்சி தனி அலுவலருக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதியம் உயா்த்தக் கோரிக்கை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

