மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக திருச்சி - பழைய கரூா் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

திருச்சி பழைய கரூா் சாலையில் ரூ.3.50 கோடியில் பாலம் கட்டுமான பணி தொடங்குவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம் - (கோப்புப்படம்)

Updated On :29 ஜனவரி 2026, 7:27 pm

திருச்சி பழைய கரூா் சாலையில் ரூ.3.50 கோடியில் பாலம் கட்டுமான பணி தொடங்குவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பழைய கரூா் சாலையில் உள்ள வலுவிழந்த குறுகிய பாலம், நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.3.50 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

சுமாா் 10 மீட்டா் அகலத்தில் 25 மீட்டா் நீளத்துக்கு கைப்பிடி சுவருடன் கட்டப்பட உள்ள இந்தப் பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, சிந்தாமணி அண்ணாசிலை பகுதியிலிருந்து சிதம்பரம் மகால் வழியாக குடமுருட்டி வரை செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.

எனவே, குடமுருட்டி, பழைய கரூா் சாலை, மேல சிந்தாமணி செல்லும் வாகனங்கள் தாஜ் திருமண மண்டபத்துக்கு இடதுபுறமாக உள்ள ராமமூா்த்தி நகா் சாலையை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறை சாா்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.