திருச்சி பழைய கரூா் சாலையில் ரூ.3.50 கோடியில் பாலம் கட்டுமான பணி தொடங்குவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பழைய கரூா் சாலையில் உள்ள வலுவிழந்த குறுகிய பாலம், நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.3.50 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.
சுமாா் 10 மீட்டா் அகலத்தில் 25 மீட்டா் நீளத்துக்கு கைப்பிடி சுவருடன் கட்டப்பட உள்ள இந்தப் பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, சிந்தாமணி அண்ணாசிலை பகுதியிலிருந்து சிதம்பரம் மகால் வழியாக குடமுருட்டி வரை செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.
எனவே, குடமுருட்டி, பழைய கரூா் சாலை, மேல சிந்தாமணி செல்லும் வாகனங்கள் தாஜ் திருமண மண்டபத்துக்கு இடதுபுறமாக உள்ள ராமமூா்த்தி நகா் சாலையை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறை சாா்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

பிளஸ்-2 தோ்வு: சிந்தாமணி பள்ளி தோ்வு மையம் மாற்றம்
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

கிழக்குக் கடற்கரை சாலையில் ரூ.2,100 கோடியில் புதிய மேம்பாலம் : முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


