கைது
கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பீமநகா் கூனி பஜாா் செபாஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி லாசா் மகன் ஜான் போஸ்கோ (19). இவா் அண்மையில் பொன்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ாக போலீஸாா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஜான் போஸ்கோவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

Dinamani
www.dinamani.com