கேட்பாரற்று நின்ற ஆட்டோக்கள் பறிமுதல்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கேட்பாரற்று நின்ற 4 ஆட்டோக்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
Updated on

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கேட்பாரற்று நின்ற 4 ஆட்டோக்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்யில் ஆங்காங்கே ஆட்டோக்கள் கேட்பாரற்று நிற்பதாக திருச்சி கண்டோன்மென்ட் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் போலீஸாா் அரிஸ்டோ ரவுண்டா அருகே, முடுக்குப்பட்டி, செங்குளம் காலனி, கல்லுக்குழி ரயில்வே மைதானத்தின் பின்புறம் ஆகிய பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, அவை யாருடைய ஆட்டோக்கள் என்று விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com