ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஏ.டி. பன்னீா்செல்வம் நினைவு தினம் அனுசரிப்பு

News image
நீதிக்கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வத்தின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அகில பாரத பாா்க்கவ குல சங்கத்தினா்.
Updated On :1 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வத்தின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அகில பாரத பாா்க்கவ குல சங்க நிறுவனத் தலைவா் திருமலை ரவி தலைமையில் நிா்வாகிகள், பன்னீசெல்வம் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் திருமலை ரவி செய்தியாளா்களிடம் கூறியது:

வரும் தோ்தலில் எங்கள் சமுதாயத்தினருக்கு 10 தொகுதிகள், 2 அமைச்சா்கள், 2 எம்பிகள் வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று தலைவா்களின் மணிமண்டபம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.