நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி திருவெறும்பூரில் புதன்கிழமை பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :25 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருடன் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு அனுமதியின்றிக் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்கின்றனா்.

அதன்படி புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மாவட்டத்தில் திருச்சி கிழக்கில் ரூ. 1,42,500, லால்குடியில் ரூ. 1 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 55,600 என மொத்தம் ரூ. 2,98,100 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் புதன்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 44,25,820 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 21,57,380 ஐ உரியவா்கள் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ. 22,68,440 கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.