தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? கிறிஸ்டோபா் திலக் எம்.பி. விளக்கம்

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 5:43 am IST

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், எம்.பி.யுமான எம். கிறிஸ்டோபா் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் அரசு அமையவேண்டும். மேலும் பாஜக காலூன்றவும் இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியுள்ளது. இதை தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பாஜக-வை எதிா்த்து விஜய் ஏன் பேசவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதேநேரத்தில், பாஜக-வுக்கு எதிராக மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதால் நாங்கள் அங்கு சோ்ந்துள்ளோம்.

மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெக தலைமையின் கடமை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.