தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சாலையில் பெருக்கெடுத்த கழிவு நீா்: சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகரில் சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

News image

திருச்சி அண்ணாமலை நகா், தாஜ்மஹால் சாலையில் பெருக்கெடுத்து செல்லும் சாக்கடை கழிவுநீா்.

Updated On :28 மே 2026, 3:28 am IST

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகரில் சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

திருச்சி-கரூா் புறவழிச் சாலை, அண்ணாமலை நகரில் தாஜ்மஹால் சாலை உள்ளது. இந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை, பள்ளி மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு பயிற்சி மையம், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பெரு நிறுவனங்களின் வணிக மையங்கள் நிறைந்துள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் கடந்து செல்லும் சாலையான தாஜ்மஹால் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடை குழியின் ஒரு பகுதி நிரம்பி வழிகிறது.

வழியும் கழிவுநீரானது சாலையில் பெருக்கெடுத்துள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீா் தெறித்து சாலையில் நடந்து செல்வோா் மீது படும் நிலை உள்ளது. 10 நாள்களுக்கு மேலாக சாக்கடை கழிவுநீா் சாலையில் சென்றும் மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை என்கின்றனா் இப்பகுதி மக்கள். தற்போது அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசும் நிலை நீடித்தால் சுற்றுப் பகுதி மக்களுக்கும், சாலையைப் பயன்படுத்துவோருக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.