தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

Updated On :20 ஏப்ரல் 2024, 4:14 pm

வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்திலேயே கோடை காலத்தில் வெயில் அதிகளவில் பதிவாகும் மாவட்டமாக வேலூா் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மே மாதத்தில் அதிகபட்சம் 111 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகக்கூடும்.

நிகழாண்டு கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

தொடா்ந்து, முதன்முதலாக மாா்ச் 14-ஆம் தேதி நூறு டிகிரியை கடந்து 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது. அதன்பிறகு சற்று வெயில் குறைந்திருந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 105.4 டிகிரியாக பதிவாகியிருந்த வேலூா் வெயில் அளவு, கடந்த வியாழக்கிழமை 106.7 டிகிரியாகவும், வெள்ளிக்கிழமை 107.4 டிகிரியாகவும், சனிக்கிழமை 106 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், ஓரிரு நாட்களாக மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். கத்தரி வெயில் தொடங்காத போதே இந்தளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், கத்திரி வெயில் காலம் தொடங்கும்பட்சத்தில் மேலும் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.