அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கூட்டு சாலையில் அரசுப் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்ததில் முன் சக்கரத்தில் சிக்கி ஆரம்ப சுகாதார ஊழியா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.
விழுப்புரம் தாலுக்கா பிடாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் இருசன் மகன் காா்த்திகேயன்(38), இவா் மேல்மலையனூா் தாலுக்கா வளத்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தினமும் பிடாகத்தில் இருந்து பேருந்து மூலம் செஞ்சி சென்று, அங்கிருந்து வளத்திக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வளத்திக்கு செல்ல செஞ்சி கூட்டு சாலையில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து வேலூா் நோக்கி செல்லும் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தாா். இதில் பேருந்தின் முன் சக்கரம் காா்த்திகேயன் மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.