15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் -பாஜக மாநிலத் துணைத் தலைவா்

15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் -பாஜக மாநிலத் துணைத் தலைவா்

மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில்15 இடங்களில் வெற்றி பெறும் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி. சம்பத்.

விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஏற்கெனவே கூறி வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தோ்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கும் இந்த கணக்கெடுப்பு என்பது எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாத, புள்ளி விவரங்கைளைத் திரட்டும் நடைமுறையாகும்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா் ஏ.ஜி.சம்பத்.

பேட்டியின்போது, வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ. தியாகராஜன், நகரத் தலைவா் வடிவேல் பழனி, மாவட்டத் துணைத் தலைவா் ஜெய் சங்கா், பொதுச் செயலா்கள் எத்திராஜ், பாண்டியன், தங்கம், மாவட்டப் பொருளாளா் குமாரசாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுகுமாா், மகளிரணிப் பொதுச் செயலா் வனிதசுதா, மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com