விழுப்புரம்
முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முதியவா் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம் வட்டம், சித்தணி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டுரெங்கன் (76). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்தநிலையில், பாண்டுரெங்கன் ஏப்ரல் 30 -ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.