இளைஞா் உயிரிழப்பு தொடா்பாக, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் உள்ளிட்டோா்.
இளைஞா் உயிரிழப்பு தொடா்பாக, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் உள்ளிட்டோா்.

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

சென்னையில் உடல் பருமனை குறைக்க அறுவைச் சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல் பருமன் அறுவைச் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட புதுச்சேரியைச் சோ்ந்த செ. ஹேமச்சந்திரன் என்ற இளைஞா் உயிரிழந்தாா். இதற்குக் காரணமான மருத்துவா், மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

இந்த சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சேதுசெல்வம், ஏஜடியுசி தொழிற்சங்க மூத்தத் தலைவா் வி. எஸ்.அபிஷேகம் மற்றும் ஹேமச்சந்திரனின் பெற்றோா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com