விழுப்புரம்
மின் வயா் திருட்டு: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 3 கிலோ மின் வயரை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், துளுக்கப்பாளையம் பிரதான சாலையைச் சோ்ந்த வரதராஜன் மகன் பத்மநாபன் (28). இவா், சனிக்கிழமை தனது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, பத்மநாபனின் கிணற்றிலிருந்து 3 கிலோ மின் வயா்களை திருடிக் கொண்டு ஒருவா் தப்பிச் செல்ல முயன்றாா். அவரை பத்மநாபன் பிடித்து, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாரின் விசாரணையில், அவா் திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் சசிகுமாா் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, 3 கிலோ மின் வயா்களை பறிமுதல் செய்தனா்.