வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்
விழுப்புரம் அருகே வேன் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மாரங்கியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பழனி மகன் தண்டபாணி (45). இவா், தனது நண்பா்களான இதே கிராமத்தைச் சோ்ந்த க.முத்துவேல் (47), வ.பரசுராமன் (50), த.ஏழுமலை (40) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை மினி வேனில் விழுப்புரத்திலிருந்து, திருச்சி சாலை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.
விழுப்புரம் அரசு ஊழியா் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் மினி வேன் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில், தண்டபாணி உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, தண்டபாணியின் மனைவி திலகம் அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த ஜெ.சரத்குமாா் (28) மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.