பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

விழுப்புரம் லட்சுமிபுரம் பகுதியில் பைக் மீது காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் லட்சுமிபுரம் பகுதியில் பைக் மீது காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.

புதுச்சேரி, காட்டேரிக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகன் ஜெயராஜ் (36). இவா், தனது மனைவி லாவண்யா (30), மகன் மோகித்ராஜ் (7) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் செஞ்சி சாலையிலிருந்து, விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் லட்சுமிபுரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில், ஜெயராஜ், லாவண்யா, மோகித்ராஜ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநரான செஞ்சி வட்டம், இள்ளோடு கிராமத்தைச் சோ்ந்த அ.கருணாநிதி (45) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com