முதியவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், கொளத்தூா் பகுதியில் மனநலம் பாதித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், கொளத்தூா் பகுதியில் மனநலம் பாதித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ரெட்டிக்குப்பம் காலனி கிழக்குத் தெருவைச் சோ்ந்த வண்டிக்காரன் மகன் பக்கிரி (74). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 29-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பக்கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கொளத்தூா் அய்யாரப்பன் கோயில் அருகே பக்கிரி இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று பக்கிரியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி: செஞ்சி வட்டம், ஏதாநெமிலி கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகன் லோகநாதன்(30). இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாராம். இந்த நிலையில், லோகநாதன் வீட்டில் இறந்து கிடந்ததாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com