அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பணியிலிருந்த அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரகண்டநல்லூா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மகன் சுந்தரபெருமாள் (54). திருவெண்ணெய் நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை பள்ளியில் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com