சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், நத்தமேடு காலனியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சுந்தா் (22). புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணியை முடித்துவிட்டு சுந்தா் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். புதுச்சேரி - திருக்கனூா் சாலையில் வழுதாவூா் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.