கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி, இலாகா ஊழியராக மாற்ற வேண்டும். மத்திய நிர்வாக தீர்ப்பாயம், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை (ஆக.16) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் கோட்டத் தலைவர் சி.ராமசாமி தலைமையில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com